சனி, 16 செப்டம்பர், 2017

ஜெர்மனி, பாராளுமன்ற தேர்தல் 2017, செப்டம்பர் 24 ல்  நடைபெற உள்ளது. இனிமையான வணக்கங்கள் அனைவருக்கும். ஐரோப்பாவின்  தலைமை நாற்காலியின் மிக முக்கியமான இரும்புக் காலாக ஜெர்மனி விளங்குகின்றது. மேலும்  மற்றய ஐரோப்பா நாடுகள் ஜெர்மனியின் தலைமையுடன் ஒரு நல்லுறவு மற்றும் நல்ல, தார்மீக ஒருமைப்பாடுகள், எதிர்கால ஐரோப்பாவின் தலை எழுத்தை தீர்மானிக்கும் என்பதில் ஜெர்மன் மக்கள் மட்டுமல்ல  ஐரோப்பா மக்களும் மிக தெளிவாக புரிந்து வைத்திருக்கின்றார்கள்.

அகதிகளுக்கான நல்லிணக்க வரவேற்பு மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மேலும் உள் நாட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உணவு உற்பத்தி கண்காணிப்பு,  இந்த பூமிப் பந்தில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை தடுக்கவும், மிக மோசமான போர்க் குற்றங்கள் நடைபெறும் நாடுகளுக்கு எதிராக படையெடுப்பு, அகதிகள் பாதுகாப்பு   மற்றும் இன அழிப்பு, சித்திரவதை, மிருகவதை தடுப்பு செய்யக்கூடிய ஒரு தைரியமான  அரசு அமைந்தால் போதும் என்பது என்னுடைய கருத்து.

மதிப்பீடு ஓய்வூதியம், வேலை இழந்தோர்களுக்கான சமூகநல உதவிகள் மற்றும் தரம் உள்ள உணவு, மருந்து மருத்துவம்  இளைய தலைமுறையினருக்கான தொழிற்கல்வி வேலைவாய்ப்புக்கள் மேலும் பெருமளவில் அகதிகளின் வருகையை தடுக்கும் நடவடிக்கைகள் பொதுவாக  ஜெர்மன் மக்களினால் வைக்கப்படும் கோரிக்கைகள்.  

தற்போது இருக்கும் அதிபர், திருமதி அங்கேலா-மேர்க்கெல்  சிரியா, ஆப்கானிஸ்தான், ஈராக்,  ஆப்பிரிக்கா அகதிகள் விடையத்தில்   தவறு இழைத்து விட்டார் என்று பொதுவாக  ஐரோப்பா மக்களினால் பேசப்பட்டு வந்தாலும் அவங்க, அன்றிருந்த அரசியல் நெருக்கடிகளை ஓரம்கட்டி விட்டு,  

பசி பட்டினி என்று அவதியுறும் சிரியா நாட்டு மழலைகள், குழந்தைகள் பெண்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்று இளகிய மனசு, தன்  கருணை உள்ளத்திலிருந்து முடிவுகளை எடுத்தார். அவர் முன்னெடுத்த அகதிகள் வரவேற்ப்பு கலாச்சாரம் பின்னால், ஐரோப்பா மக்களினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது மட்டுமல்லாமல்  அது  ஒரு  போதும் அவருடைய அரசியல் வாழ்க்கைக்கு இடைஞ்சலாக வராது  என்பது என்னுடைய ஒரு கருத்துக்கனிப்பு.     

SPD அதிபர் வேட்பாளர் மார்டின் ஷூல்ஸ்,  அவர்களின் அரசியல் வாழ்க்கை பற்றி எனக்கு சரியாக தெரியாது இருந்தாலும், அவர்களும்  மிகத் திறமையான அரசியல்வாதி என்பதில் எந்த மாற்றுக்கருத்தும்  இல்லை,  அதிபர், திருமதி அங்கேலா-மேர்க்கெல்  (CDU) இவர்களில் யார் ஆட்சியை பிடித்தாலும் ஜெர்மனி, ஐரோப்பாவின் இறையான்மைக்கு எந்த விதமான பங்கமும் ஏற்படாது,

இனிமேல் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் வாய்ப்புக்கள் எந்த கட்சிக்கும்  கிடைக்காது என்பது நிதர்சனமான ஒரு உண்மை. 70 ஆண்டு கால ஜெர்மனியின் நல்லாட்சி அரசியல் வாழ்க்கை புதையுண்டு போகாமல் பாதுகாக்கப்பட்டு, அடுத்த தலை முறையினருக்கு எடுத்து செல்லப்பட வேண்டும், அதற்கு பலம் வாய்ந்த ஒரு எதிர்க் கட்சி அமைய  வேண்டும் என்பது என்னுடைய சின்ன விண்ணப்பமாக இருக்கின்றது  நன்றி என்றும் அன்புடன்

Unbenannt - 1.jpg


2016-17 சிறப்பு-பார்வை
இந்த கலியுகத்தில்          
இந்த கலியுகத்தில் ❤❤             
இந்த கலியுகத்தில் ❤❤❤
பரப்பிரமத்தின்  ஆட்சி மலரட்டும்.   ......
sri rama jyam-2016.jpg

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக